மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், பா.ஜ.க. பொருளாளராக உள்ள செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்   பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வகணபதி அறிவிப்பு

புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், பா.ஜ.க. பொருளாளராக உள்ள செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரியில் தற்போது என்ஆர் காங்கிரஸ் - பாஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 10 சட்டமன்ற உறுப்பினர்களும், பா.ஜ.க.-வுக்கு நியமன எம்எல்ஏக்களை சேர்த்து 9 பேரும் உள்ளனர். இந்த சூழலில் புதுச்சேரியில் இருக்கும் ஒரே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு இன்று நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரசும், பாஜகவுக்கு இடையில் மாநிலங்களவை எம்.பியை பெறுவதில் போட்டி நிலவியது. இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கே மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே வேட்பாளரைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், புதுச்சேரி மாநிலங்களவை எம்பி வேட்பாளராக பா.ஜ.க.-வின் செல்வகணபதி நேற்று அறிவிக்கப்பட்டார். இதன்படி புதுச்சேரி பா.ஜ.க. பொருளாளராக உள்ள செல்வகணபதி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.