முதலிடம் பிடித்த பாஜக.. உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது!!

மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அங்கு பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

முதலிடம் பிடித்த பாஜக.. உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது!!

உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என நான்குமுனை போட்டி நிலவியது. உபி.யில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதற்கு அடுத்த இடத்தில் சமாஜ்வாதி கட்சி உள்ளது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகியவை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 200-க்கு அதிகமான பாஜக தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது.