நாளை மறுநாள் சென்னை வருகிறார் திரெளபதி முர்மு!!

பாஜக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு, நாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

நாளை மறுநாள் சென்னை வருகிறார் திரெளபதி முர்மு!!

இந்திய ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி (ஜூலை) நடைபெற உள்ளது. பா.ஜனதா-கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர் மு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடும் 2 வேட்பாளர்களும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதன்படி, எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா இன்று சென்னை வருகை தந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து ஆதரவு கோரவுள்ளார்.

பா.ஜனதா வேட்பாளர் திரௌபதி நாளை மறுநாள் சென்னை வருகிறார். சென்னையில் கூட்டணி கட்சிகளான அ.தி. மு.க., பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திரௌபதி முர் மு தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் செய்து வருகின்றனர். சென்னையில் அ.தி. மு.க. தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.