தடுப்பூசிக்கு தஞ்சமில்லை...! மத்திய அரசு தகவல்!!

நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் மொத்தம் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசிக்கு தஞ்சமில்லை...! மத்திய அரசு தகவல்!!

நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் மொத்தம் 3 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 49 கோடியே 49 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இவற்றில் 46 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 662 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு விட்டன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும், தனியார் ஆஸ்பத்திரிகளிடமும் 3 கோடியே 58 ஆயிரத்து 190 டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மேலும் 8 லட்சத்து 4 ஆயிரத்து 220 தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.