அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு - மேகாலயா முதலமைச்சர் கோன்ராட் சங்மா!

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு - மேகாலயா முதலமைச்சர் கோன்ராட் சங்மா!

ஆக்கப்பூர்வமான நேர்மறையான எண்ணங்களோடு இணைந்து செயல்பட வருமாறு, மேகலாயா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள கான்ராட் சங்மா அனைத்து கட்சிகளுக்கும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

மேகாலயாவில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சியின் தேசிய தலைவர் கான்ராட் சங்மா, பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 

இதையும் படிக்க : சென்னையில் பேருந்துகள் தனியார் மயமாகிறதா...? அமைச்சர் அளித்த விளக்கம்...!

இந்நிலையில் நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ள கான்ராட் சங்மா, மேகாலயாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் முடிந்து விட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் ஆக்கப்பூர்வமான நேர்மறையான எண்ணங்களோடு ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல உழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மேகாலயாவில் மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவு அளித்த யூடிபி, பிடிஎஃப் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.