மூடுபனியால் சூழப்பட்ட தலைநகர்... மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு...

வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்..

மூடுபனியால் சூழப்பட்ட தலைநகர்... மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு...

நாடு முழுவதும் குளிர்காலம் நிலவும் சூழலில், வடமாநிலங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. டெல்லியில் மூடுபனி காரணமாக, மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குளிரின் பிடியில் இருந்து தங்களை தக்காத்துக் கொள்ள, நெருப்பு மூட்டி மக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். காலை 9 மணி வரரை நீடித்த கடும் பனி மூட்டத்தால் பொது மக்க்ள வெளியே வர முடியாமல் முடங்கினர். காலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோன்று, உத்திரபிரதேச  மாநிலம் மொராதாபாத்தில் சாலைகளே தெரியாத அளவிற்கு சூழ்ந்திருந்த அடர் பனியால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியூட்டியபடி ஓட்டி சென்றனர்.