பாஜக தலைவர்களை வேட்டை நாய்களுடன் ஒப்பிட்டு பேசி கடுமையாக விமர்சித்தார் - சித்தராமையா!

பாஜக தலைவர்களை வேட்டை நாய்களுடன் ஒப்பிட்டு பேசி கடுமையாக விமர்சித்தார் - சித்தராமையா!

பாஜக தலைவர்களை வேட்டை நாய்களுடன் ஒப்பிட்டு பேசி கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

கர்நாடக பள்ளி பாடப்புத்தகங்களில் காவி சாயம் பூசப்பட்டு வருவதாக காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மைசூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய சித்தராமையா, தான் தனியாக கருத்து வெளியிட்டாலும் பாஜகவிலிருந்து வேட்டை நாய்கள் போல் ஒட்டுமொத்தமாக 25 பேர் பதில் தாக்குதல் நடத்த வந்துவிடுவதாகவும், ஆனால் தனக்கு ஆதரவாக தனது கட்சியில் இருந்து ஒருவர் கூட பேசுவதில்லை என கவலை தெரிவித்தார்.

மேலும் வாய்திறக்க மறுக்கும் கட்சி உறுப்பினர்களுக்காகவே கட்சி அலுவலகத்திலிருந்து புத்தகங்கள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.