பிரதமர் மோடி நண்பர்களின் குரலை மட்டுமே கேட்கிறார் - ராகுல் காந்தி ட்வீட்!

பிரதமர் மோடி தமது  நண்பர்களின் குரலை மட்டுமே கேட்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடி நண்பர்களின் குரலை மட்டுமே கேட்கிறார் - ராகுல் காந்தி ட்வீட்!

அக்னிபாத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ள நிலையில்,  ராகுல் இவ்வாறு விமர்சித்திருக்கிறார்.  

இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், அக்னிபாத்தை இளைஞர்களும், விவசாய சட்டத்தை விவசாயிகளும், பண மதிப்பிழப்பை பொருளாதார நிபுணர்களும், ஜி.எஸ்.டி. யை வர்த்தகர்களும் நிராகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  

மேலும், நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை என்றும், ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலை தவிர வேறு எதற்கும் செவி சாய்ப்பதில்லை என்றும் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.