காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கொரோனா சிகிச்சை... டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.!

காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு  கொரோனா சிகிச்சை... டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி.!

காங்கிரஸ்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென  டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் சில தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
 
அவர்களில் சிலருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், சோனியா காந்தியும் லேசான காய்ச்சல் மற்றும் தொற்று அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதோடு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் கூடுதல் அவகாசம் கோரியிருந்தார்.
 
இந்தநிலையில், இன்று திடீரென சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை டுவிட்டரில் உறுதி செய்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கொரோனா தொடர்பான சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சோனியா காந்தி நலமுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.