காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல்... சத்தீஸ்கரில் சிங் தியோவை முதலமைச்சராக்க வலியுறுத்தல்...

பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து, சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கோஷ்டி மோதல் தீவிரம்

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல்... சத்தீஸ்கரில் சிங் தியோவை முதலமைச்சராக்க வலியுறுத்தல்...

சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ், கட்சிக்குள் கோஷ்டி மோதல் தீவிரமடைந்துள்ளது. சத்தீஸ்கரில் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்துள்ள மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து, சத்தீஸ்கரிலும் கோஷ்டி மோதல் தீவிரமாக உள்ளது.

சுகாதார அமைச்சராக உள்ள சிங் தியோ மற்றும் பூபேஷ் பாகேல் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பூபேஷ் பாகேலை நீக்கி, சிங் தியோவை முதலமைச்சராக்க வேண்டும் என, காங்கிரஸ் எம். எல்.ஏ.,க்கள் பலர், கட்சி தலைமைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.