பா.ஜ.க.வினர் கொல்லப்பட்டது எதிர்வினை... விவசாய சங்க தலைவர் சர்ச்சை கருத்து...

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வினர் கொல்லப்பட்டது எதிர்வினை என விவசாய சங்க தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வினர் கொல்லப்பட்டது எதிர்வினை... விவசாய சங்க தலைவர் சர்ச்சை கருத்து...

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித், லக்கிம்பூரில் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதையடுத்து, வன்முறையில் பா. ஜ.க.வை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டது எதிர்வினை என கூறியுள்ளார்.

பா. ஜ.க.வினரை கொன்றவர்களை குற்றவாளிகளாக கருதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லக்கிம்பூர் சம்பவத்திற்கு எதிராக அமைதியான வழியில் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், ராகேஷ் திகாயித்தின் இந்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.