நபிகர் நாயகம் பற்றி சர்ச்சை பேச்சு: ஜெய்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆலோசனை!!

நபிகர் நாயகம் பற்றி சர்ச்சை பேச்சு: ஜெய்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆலோசனை!!

ஞானவாபி மசூதி விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அடுத்த மாதம் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக நிர்வாகி நுபுர் சர்மா நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனம் வலுத்த நிலையில், அவர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இருப்பினும் அவரது இந்த கருத்து பிரதமர் மோடி அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர கோயில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக ஆர்.எஸ். எஸ் அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருவதால், வடமாநிலங்களில் வன்முறை சூழல் நிலவுகிறது.

இந்தநிலையில் இந்த பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதித்து, உரிய அறிவுரை வழங்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடைபெறும் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் முக்கிய தலைவர்கள் பங்கேற்று ஆலோசிக்க உள்ளனர்.