கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு...

கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு...

கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா நிலவரங்களை தினசரி வெளியிட்டு வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 47 ஆயிரத்து 92 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் கேரளாவில் மட்டும் 32 ஆயிரத்து 803 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதனால் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 35 ஆயிரத்து 181 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 20 லட்சத்து 28 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தீவிர தொற்று காரணமாக 509 பேர் பலியானதாகவும், கேரளாவில் மட்டும் 173 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 81 லட்சத்து 9 ஆயிரத்து 244  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.