ஒரே நாளில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. வேகமெடுக்கும் தொற்று!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. வேகமெடுக்கும் தொற்று!

இந்தியாவில் ஒமிக்ரானுக்கு பிறகு, குறைய தொடங்கிய கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் புதிய பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 233 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம் என்றும், இதனால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று மட்டும் தீவிர தொற்றுக்கு 7 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 345 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், இதனால் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 36 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 194 கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 416 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.