கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று... உச்ச நீதிமன்றத்தில் இன்றுமுதல் தொடங்குகிறது நேரடி விசாரணை...

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் முக்கிய வழக்குகளுக்கான விசாரணை  நேரடியாக நடைபெறவுள்ளது.

கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று... உச்ச நீதிமன்றத்தில் இன்றுமுதல் தொடங்குகிறது நேரடி விசாரணை...

கொரோனா எதிரொலியாக கடந்த ஓராண்டுகளாக வழக்கு விசாரணையானது காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. தற்போது தொற்று குறைந்துள்ளதால், குறிப்பிட்ட சில வழக்குகளை நேரடி விசாரணை மூலம் தீர்த்து வைக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதன்படி செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளை தவிர்த்து மற்ற தினங்களில் காணொலி வாயிலாக வழக்கு விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விருப்பம் உள்ள வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகலாம் எனவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.