வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்!!

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்!!

ஆந்திராவில் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர், தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு என்பவர் இருந்து வருகிறார். இவர் தேர்தலின் போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். 

பின்னர், தேர்தலில் வெற்றியடைந்த பின், அவர் கேட்ட திட்டங்களுக்கு, அரசு நிதி வழங்கவில்லை. இதற்கிடையே 31 மாதங்கள் கடந்த நிலையில், தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை என கூறி,  நகராட்சி கவுன்சிலர் ராமராஜு தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டுள்ளார். 

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க || ரூட் தல: இரு பிரிவு மாணவர்களிடையே கல்வீச்சு தாக்குதல்... பயணிகள் காயம்!!