புதுச்சேரியில் ஜுன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜுன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுகடைகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில்  ஜுன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கானது ஜுன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 வரை  செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மது பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 38 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளதால்  மது பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே சமூக இடைவெளி, முககவசம் போன்ற கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று மதுக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.