மிக அதி தீவிர புயலாக மாறிய “பிபோர்ஜாய் புயல்” இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

மிக அதி தீவிர புயலாக மாறிய “பிபோர்ஜாய் புயல்” இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவாகியுள்ள ”பிபோர்ஜாய்” புயல் மிக அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.  

கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள ”பிபோர்ஜாய்” புயல் அதி தீவிர புயலில் இருந்து மிக அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த அதி தீவிர புயலான பிபோர்ஜாய் 14 ஆம் தேதி வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கிடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க : அய்யய்யோ...மீண்டும் மீண்டுமா...சென்னையில் தடம் புரண்ட ரயில்!

இதன்காரணமாக, குஜராத்தின் மாண்டவி மற்றும் பாகிஸ்தானின் கராச்சி பகுதிகளில் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.