உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி: சரிவை நோக்கி பங்குச்சந்தை!!

உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலியாக, ஆசிய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆயிரத்து 713 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. 

உக்ரைன் - ரஷ்யா போர் எதிரொலி: சரிவை நோக்கி பங்குச்சந்தை!!

உக்ரைன் எல்லையில் பெரும் படையை நிறுத்தி போர் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த ரஷ்யா, இன்று காலை முதல் போர் தாக்குதலை தொடங்கியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவில் விமானப்படை தளத்தை குறிவைத்து, இந்த தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றன. இதன் எதிரொலியாக ஆ சிய பங்குச்சந்தை கடும் வீழ்ச் சியை சந்தித்துள்ளது. அதன்படி ஆ சிய பங்குச்சந்தை ஆயிரத்து 713 புள்ளிகள் வரை சரிந்து 55 ஆயிரத்து 518 புள்ளிகளில் நிலைக்கொண்டு வர்த்தகமாகியுள்ளது.

இதேபோல் தே சிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 498 புள்ளிகள் குறைந்து 16 ஆயிரத்து 564 என நிலைக் கொண்டு வர்த்தமாகியுள்ளது. ஆட்டோமொபைல், வங்கி, எஃப்.எம். சி.ஜி., எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஐ.டி., மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறையைச் சார்ந்த பங்குகளும், 2 முதல் 4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.