தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான தலைமை ஆசிரியர் - இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால் பரபரப்பு
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான பள்ளி ஆசிரியர் சுபிந்தர் கவுரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான பள்ளி ஆசிரியர் சுபிந்தர் கவுரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீரில் அண்மைக்காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஸ்ரீநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குள் அத்து மீறி நுழைந்த தீவிரவாதிகள் தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர், மற்றும் ஆசிரியை ஒருவரை சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுரின் இறுதி ஊர்வலம் இன்று ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றதுடன் "தங்களுக்கு நீதி வேண்டும்" என முழக்கமிட்டவாறு ஊர்வலமாக சென்றனர்.