சாதனை லிஸ்ட்லில் நுழைந்த டெல்லி... ஒரே நாளில் 2.05 பேருக்கு தடுப்பூசி...

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

சாதனை லிஸ்ட்லில் நுழைந்த டெல்லி... ஒரே நாளில் 2.05 பேருக்கு தடுப்பூசி...
கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்கும் வகையில் டெல்லி அரசு முழு வீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
இதுதொடர்பாக டிவிட்டரில் தெரிவித்திருந்த அமைச்சர் மணிஷ் சிசோடியா, கடந்த 3 நாட்களில் ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் நேற்று 2 லட்சத்து 5 ஆயிரத்து 170 பேர் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் மூலம், ஒரு நாளில் அதிக தடுப்பூசி செலுத்தி டெல்லி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.  
 
டெல்லியில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட  73 லட்சத்து 28 ஆயிரத்து 647 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இந்த முயற்சியை தீவிரப்படுத்தும் விதமாக வருகிற ஜூலை மாதத்தில் கூடுதலாக 45 லட்சம் தடுப்பூசிகளை வழங்க கேட்டு மத்திய அரசிடம் டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.