போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் கொடுக்க வந்த யானைகள்....வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! 

யானை ஒன்று தனது குட்டி யானையுடன் காவல் நிலையத்தில் நுழைய முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

போலீஸ் ஸ்டேசனுக்கு புகார் கொடுக்க வந்த யானைகள்....வைரலாகும் சிசிடிவி காட்சிகள்! 

யானை ஒன்று தனது குட்டி யானையுடன் காவல் நிலையத்தில் நுழைய முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே கேரளா வனப்பகுதியில் அதிகப்படியான யானைகள் இருக்கிறது.பரம்பிக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் தாய் யானை மற்றும் அதன் குட்டி இரண்டும் சேர்ந்து காவல் நிலையத்தில், இரும்பு கேட்டின் முன் உள்நுழைய முற்படும்  காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி ,பார்ப்பவர்களை கவரும் விதமாக உள்ளது.இந்த வீடியோவை கேரளா போலீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 இந்நிலையில் இந்த வீடியோவை பிரபல மலையாள சினிமாவின் வசனங்களுடன் இணைத்து கேரளா போலீஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி பதிவு செய்துள்ளனர். யானைகள் யாரையோ பற்றி புகார் கொடுக்க வந்துள்ளது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.