பெண் காவலருக்கு நடந்த பாலியல் தொல்லை...தமிழிசை வலியுறுத்திய அட்வைஸ் என்ன?

பெண் காவலருக்கு நடந்த பாலியல் தொல்லை...தமிழிசை வலியுறுத்திய அட்வைஸ் என்ன?

பெண்களுக்கு அனைவரும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

ஆசிரியர்களுக்கு விருது வழங்கிய தமிழிசை:

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று காலை திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாவித்திரி பூலே விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார். அதன்பின்னர் திருப்பதி மலைக்குச் சென்று சாமி தரிசனம்  செய்தார்.

இதையும் படிக்க: பொங்கல் பரிசாக 5000 வழங்க சொன்ன திமுக...இப்போ 1000 வழங்க காரணம் என்ன? ஈபிஎஸ் கேள்வி!

பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும்:

பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பெண் காவலருக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,  நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. ஆனால் காவல்துறை, ஊடகத்துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வு ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு அனைவரும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.