தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்...!

திருப்பதி மலையில் பௌர்ணமி கருட சேவை...! ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!

தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய ஏழுமலையான்...!

திருப்பதி மலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி மலையில் ஏழுமலையானின் கருட வாகன சேவை, கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. 

கருட வாகன சேவையை முன்னிட்டு சர்வ அலங்கார திருக்கோலம் செய்யப்பட்ட மலையப்ப சுவாமி, கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலைப்ப சுவாமிக்கு தூப,தீப,நெய்வேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே ஏழுமலையானின் கருட வாகன சேவை கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.