ஃபேக் போலி அக்கவுன்ட்டை நம்பி குழந்தையை ரப்பர் தோட்டத்தில் வீசிய தாய்... பறிபோன 3 உயிர்கள்.. கேரளாவில் அதிர்ச்சி

கேரள மாநிலத்தில் ஒரு பெண்ணை காதலிப்பதாக அவரது உறவுக்கார பெண்களே பிராங்க் செய்ததை அறியாமல் அந்த பெண் தனது குழந்தையை கொன்று வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேக் போலி அக்கவுன்ட்டை நம்பி குழந்தையை ரப்பர் தோட்டத்தில் வீசிய தாய்... பறிபோன 3 உயிர்கள்.. கேரளாவில் அதிர்ச்சி

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள கல்லுவாதுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவருக்கு வயது 24. இவரது கணவர் வளைகுடா நாட்டில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் ரேஷ்மா மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்.

இதனை கணவனிடமிருந்தும், வீட்டில் உள்ளவர்களிடமிருந்தும் ரேஷ்மா மறைத்துள்ளார். இதற்கு காரணம் அவரது, முகநூலில் ஆனந்த் என்ற பெயரில் பிரெண்ட் ரிக்வஸ்ட் கிடைத்தது. 

இதையடுத்து சிறிது காலத்தில் அந்த ஆனந்த் மீது ரேஷ்மாவுக்கு காதல் ஏற்பட்டது. அப்போது ஆனந்திடம் தனக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை இருப்பதாகவும், தற்போது கருவுற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.  ஒரு குழந்தையுடன் வந்தால் தான் ஏற்றுக் கொள்வதாக ரேஷ்மாவிடம் ஆனந்த் தெரிவித்திருந்தார்.

இந்த ஆனந்த் என்ற ஐடி போலியாக ரேஷ்மாவின் உறவுக்கார பெண்ணால் உருவாக்கப்பட்டதை அறியாமல் காதல் வலையில் சிக்கினார் ரேஷ்மா. 

இப்படியே காலங்கள் கடந்தது, வீட்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ரேஷ்மா. பின்னர் குழந்தையை அருகில் இருந்த ரப்பர் தோட்டத்தில் வீசியுள்ளார்.

இதையடுத்து தகவலறிந்த போலீஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுகிடும் தகவல்கள் கிடைத்துள்ளன

அந்த ஆனந்த் என்ற போலி கணக்கை தொடங்கியது ரேஷ்மாவின் உறவுகார பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. 
 விளையாட்டாக தொடங்கிய அந்த விஷயம் , ரேஷ்மா கொலை செய்யும் அளவிற்கு துணிந்ததால் எங்கு இந்த கொலை வழக்கில் மாட்டிக்கொள்வோமோ என்று மன உளைச்சலில் அந்த உறவுக்கார பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். 

இதற்கிடையே ரேஷ்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விளையாட்டாக தொடங்கி 3 உயிர்களை காவு வாங்கி வினையாக முடிந்துள்ளது