நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு..!

நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் முடிவு..!

வேளாண் சட்டத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில் தொடங்க விருக்கும் குளிர்கால கூட்ட தொடரின் போது நாடாளுமன்றத்தை தினமும் முற்றுகையிட விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க தலைவர்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக வருகிற 29ஆம் தேதி முதல் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் டிராக்டரில் சென்று நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.