முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டிலின் கணவர் உயிரிழப்பு...!!

முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டிலின் கணவர் உயிரிழப்பு...!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டிலின் கணவர் தேவிசிங் பாட்டீலின் இறுதிச் சடங்குகள் இன்று புனேவில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் மற்றும் முதல் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் அவரது 89வது வயதில் புனேயில் இன்று காலமாகியுள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று  காலை 9 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதீபா பாட்டீலுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  76 வயதில் தடகளம்.... தேசிய போட்டியில் சாதனை செய்த சாமுவேல்!!!