உத்தரபிரதேச விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு

மகாராஷ்டிராவில், லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு

மகாராஷ்டிராவில், லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் வெடித்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்த நிலையில் விவசாயிகள் மீது காரை ஏறியது தொடர்பாக மத்திய இணையமைச்சர் மகன் அஜய் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உத்தரபிரதேச விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் ஆளும் மகா விகாஸ் கூட்டணி அரசு சார்பில் இன்று முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.