அதிக வெப்பத்தினால் உயரும் உயிரிழப்புகள்...நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்...!

அதிக வெப்பத்தினால் உயரும் உயிரிழப்புகள்...நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்...!

மகாராஷ்டிராவில் வெப்பத் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் நிலவும் கடுமையான வெப்பத்தாக்கத்தினால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேரில் சென்று சந்தித்த ஏக்நாத் ஷிண்டே ஆறுதல் கூறினார்.

இதையும் படிக்க : அண்ணாமலை சொன்னால்...நான் அதற்கு பதில் அளிப்பேன் - ஓபிஎஸ்!

அதேபோல் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேயும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் உயிரின் மதிப்பை பணத்துடன் ஒப்பிட முடியாது என தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கருத்து தெரிவித்துள்ளார்.