வெளுத்து வாங்கும் கனமழை : மாநிலங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!

வெளுத்து வாங்கும் கனமழை : மாநிலங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!

டெல்லி, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மத்தியப்பிரதேசத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை வடமாநிலங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. டெல்லியின் சராய் கேலில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் பொதுப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி...வழியிலேயே நிறுத்திய போலீசார்...போராட்டத்தில் கிராமத்தினர்!

அதேபோல், குஜராத்தின் நவ்சாரியில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதோடு, சண்டிகர், ஜம்மு காஷ்மீரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஹரியானாவில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் இருநாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.