கர்நாடக தேர்தலில் போட்டியிடமாட்டார்...நான் போட்டியிடுவேன் - ஜெகதீஷ் ஷெட்டர்!

கர்நாடக தேர்தலில் போட்டியிடமாட்டார்...நான் போட்டியிடுவேன் - ஜெகதீஷ் ஷெட்டர்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இளையோர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிட மாட்டார் என பாஜ.க. தலைமை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : என்னை சிறையில் அடைக்கலாம்; ஒருபோதும் முடக்க முடியாது - ராகுல்காந்தி பேச்சு!

ஆனால், பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கு தான் உதவியாக இருந்ததாக ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார். எனவே, தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தலைமையிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.