உத்தரகாண்டில் வெற்றி பெற்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்

உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உத்தரகாண்டில் வெற்றி பெற்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்

உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அடிக்கடி சென்று மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார்.

இந்நிலையில் டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  உத்தரகாண்டில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் மாதத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார்.  இதை தாங்கள் டெல்லியில் அமல்படுத்தி இருப்பதாகவும், உத்தரகாண்டிலும் அதனை சாத்தியப்படுத்துவோம் என்றும் கூறினார்.