”'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து‌ நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும்” - கே. பாலகிருஷ்ணன்.

”'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து‌ நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும்” - கே. பாலகிருஷ்ணன்.

'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து‌ நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும் என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என கருதுவதற்க்கு எந்தவித சரியான காரணமும் இல்லை என கூறி அவரின் 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. 

இன்னிலையில் இந்த தீர்ர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- 

” மோசடிப் பேர்வழிகளின் பெயர்களில் மோடி என்ற பெயர் இருப்பதை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு உச்சபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதைத் தொடர்ந்து அவசரகதியில் அவருடைய எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. வசித்துவந்த வீடும் காலிசெய்யப்பட்டது.

இந்த தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. பதவியை பறிக்கும் விதத்தில் 2 ஆண்டுகள் உச்சபட்ச  தண்டனை வழங்கிட எந்த காரணமும்  தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்றதுடன்,  பதவியை பறித்ததால் மக்களின் ஜனநாயக உரிமையையும் பாதித்துள்ளது என உச்சநீதிமன்றம் சரியாகக்‌ சுட்டியுள்ளது.

அதானி - மோடி இடையிலான கள்ளக் கூட்டினை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி பேசியதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே பாஜக இந்த வழக்கை கையில் எடுத்தது. இவ்வாறுதான்‌ மோடி ஆட்சி தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்க்கட்சிகளை முடக்கும் விதத்தில் ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் சீர்குலைக்கிறது. ஆனால், அந்த மமதைக்கு உச்சநீதிமன்ற‌ம் அணைபோட்டுள்ளது.
'இந்தியா' இன்னும் வலிமையோடு எழுந்து‌ நின்று, எதேச்சதிகாரக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பும்.”, என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க   | ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு... வழக்கு கடந்து வந்த பாதை!!