மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

மேகதாது அணைப் பிரச்சனை தொடர்பாக, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேச உள்ளார்.

மேகதாது அணை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

மேகதாது அணைப் பிரச்சினை தொடர்பாக, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேச உள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் தமிழகத்திடம் தெரிவிக்காமல் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையையும் கர்நாடகா கட்டியுள்ளது. மேலும், மேகதாதுவில் அணைகட்டுவதை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் விவாதிப்பதற்காக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார். அப்போது மேகதாது மற்றும் தென்பெண்ணை அணைகள் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ள அவர், காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து தமிழகத்தின் நிலைப்பாட்டையும் எடுத்துரைப்பார் என கூறப்படுகிறது.