இனிமேல் இது தானா? ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயார் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த  தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

இனிமேல் இது தானா? ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயார் - இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

இந்தியா பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில வாரியாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தலும், நாடாளுமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அடிக்கடி தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால் ஏற்படும் நிதி சுமையை குறைக்க ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தலாம் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. 

ஆனால் இது மாநில சுயாட்சியை குலைக்கும் வகையில் உள்ளதாக பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஒரே தேர்தலாக நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்ய தயார் எனவும் அவர் கூறினார்.