போட்டோக்கள் எடுத்து செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்தால் மட்டும் போதாது... உண்மையின் பக்கம் மக்கள் இருப்பார்கள் - ஜே.பி.நட்டா...

ராகுல் காந்தி இன்று தேர்ந்தெடுத்திருக்கும் பாதை 70-கள் மற்றும் 80-களின் பாதையாகும். இன்று உலகம் மிகவும் முன்னேறிவிட்டது என பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

போட்டோக்கள் எடுத்து செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்தால் மட்டும் போதாது... உண்மையின் பக்கம் மக்கள் இருப்பார்கள் - ஜே.பி.நட்டா...

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் விவகாரம் தொடர்பாக,  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.  மேலும் வன்முறையின் இறந்தவர்களின் குடும்பத்தாருக்காக 15 நிமிடங்கள் செலவழித்து, 2 போட்டோக்கள் எடுத்து செய்தி நிறுவனங்களுக்கு கொடுத்தால் மட்டும் மாற்றம் ஏற்பட்டு விடாது என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி இன்று தேர்ந்தெடுத்திருக் கும் பாதை 70-கள் மற்றும் 80-களின் பாதையாகும். இன்று உலகம் மிகவும் முன்னேறிவிட்டது என கூறியுள்ள நட்டா, மக்களுக்கு அனைத்தும் தெரியும் எனவும் உண்மையின் பக்கம் மக்கள் இருப்பார்கள் என கூறினார்.மேலும் பொறுமை இல்லாத ஒருவரால் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பணியாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.