இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து கருத்து கூற கங்கனாவுக்கு உரிமை இல்லை..சந்திரகாந்த் பாட்டீல்

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து கருத்து கூற கங்கனா-வுக்கு உரிமை இல்லை என மகாராஷ்டிர  மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து கருத்து கூற கங்கனாவுக்கு உரிமை இல்லை..சந்திரகாந்த் பாட்டீல்

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து கருத்து கூற கங்கனா-வுக்கு உரிமை இல்லை என மகாராஷ்டிர  மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கங்கனாவின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், 2014-க்கு பிறகு தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்ற நடிகை கங்கனாவின் கருத்து அவரது தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம்.  

அதேநேரம், ஆங்கிலேயர்களிடம் இருந்து கடந்த 1947 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற சுதந்திரம் குறித்து கருத்து கூற கங்கனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், அது முற்றிலும் தவறு எனவும் கூறினார்.