கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவினர் அமளி: ஆவேசத்தில் சித்தராமையா சாடல்..!

கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவினர் அமளி:  ஆவேசத்தில் சித்தராமையா சாடல்..!

காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 5 திட்டங்களை அமல்படுத்தவில்லை என பாஜக சட்டமன்ற கூட்டத்தொடரில் அவை மையப்படுத்தியில் ஆர்ப்பாட்டம். அவை நடவடிக்கை ஒத்திவைப்பு. ஆவேச விவாதத்தில் சித்தராமையா... 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்த பிறகு காங்கிரஸ் அளித்த 5 தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை என இன்று பாஜக கட்சி சார்பில் போராட்டம் நடத்தினர். இன்று காலை பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து தலைவர்களும் எடியூரப்பா தலைமையில் போராட்டம் நடத்தினர். 

காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 5 திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்ற பிறகு பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி உடன் சபாநாயகர் யூ டி காதர் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது குருகிட்டு பேசிய பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கேள்வி பதில் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு பாஜக கொண்டுவரும் ஒத்திவைப்பு தீர்மானம் மீது விவாதம் நடந்த வலியுறுத்தினார்.  

ஆனால் சபாநாயகர் அதை ஏற்காத நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி கே சிவகுமார் இருவரும் பாஜக கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானம் மீது பதில் அளித்தனர். அதன் பிறகும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அதை ஏற்காமல் அவையின் மத்திய பகுதியில் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் அவையின் மைய பகுதியில் கண்டன முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவையை சபாநாயகர் 15 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.

இதனையடுத்து,  தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு சபாநாயகரை முற்றுகையிட்ட பாஜக உறுப்பினர்களை முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்தார். 

 சபாநாயகரை முற்றுகையிட்டு பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், முந்தைய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு விமர்சித்தார்.


இதையும் படிக்க    | "இலவசம் என்ற வார்த்தை கூட பயன்படுத்தக்கூடாது என முதல்வர் என்னிடம் சொன்னார்" - உதயநிதி!