இவர்களுக்கு 'பாரத ரத்னா' கொடுக்க வேண்டும்.. கெஜ்ரிவால் கோரிக்கை.! 

இவர்களுக்கு 'பாரத ரத்னா' கொடுக்க வேண்டும்.. கெஜ்ரிவால் கோரிக்கை.! 

கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த அவர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உயிர்நீத்த மருத்துவர்களுக்கு நாட்டின் உயரிய விருதினை வழங்குவதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்திய மருத்துவர்கள் என தாம் குறிப்பிட்ட அந்த சொல்லுக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் அடங்குவர் என்றும், இதுவே குடும்பத்தை பற்றி கவலைப்படாது இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறந்த மரியாதை என தெரிவித்துள்ளார்.