மணீஷ் பாஜகவில் இணைந்தால் நாளைக்கே விடுதலை - கெஜ்ரிவால்

மணீஷ் பாஜகவில் இணைந்தால் நாளைக்கே விடுதலை - கெஜ்ரிவால்

மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் நாளைக்கே விடுதலை செய்யப்படுவார் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ளார். இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவா்,  மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால், நாளைக்கே அவர் விடுதலையாகிவிடுவார் எனவும்  அவா்களுக்கு பிரச்சனை ஊழல் அல்ல எனவும் அமைச்சர்கள் செய்யும் நல்ல பணிகளை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம் என அவா் கூறினார்.