இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு?

இந்தியாவில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25, 920 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை 30 ஆயிரத்து 757 ஐ விட அதிகமாகும். இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,27,80,235 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு குறைந்து வரும் அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 66, 254 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,19,77,238 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் 492 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,10,905 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 92 ஆயிரத்து 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 174 கோடியே 64 லட்சத்து 99 ஆயிரத்து 461ஆக அதிகரித்துள்ளது.