இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று மேலும் குறைந்துள்ளது.

இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தொடர்ந்து 3 வது அலையின் தாக்கம் வேகமாக குறைந்து வருகிறது. அதன்படி, நேற்றைய பாதிப்பு 4 ஆயிரத்து 362 ஆக இருந்தது. நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு குறைவுதான்.

இந்நிலையில், இன்று புதிதாக 3 ஆயிரத்து 993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,29,71,308 ஆக அதிகரித்துள்ளது. 

பலி எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. அதன்படி, ஒரே நாளில் 108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,15,210 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,055 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதன் மூலம், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,06,150 ஆக அதிகரித்துள்ளது. மின்னல் வேகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது அதே வேகத்தில் குறைந்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.  இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 179,13 கோடியாக ஆக உள்ளது.