இபிஎஸ்-ன் டெண்டர் விவகாரம் பேச அறப்போர் இயக்கத்திற்கு வாய் பூட்டு

நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றம்

இபிஎஸ்-ன் டெண்டர் விவகாரம் பேச  அறப்போர் இயக்கத்திற்கு வாய் பூட்டு

இபிஎஸ்-ன் டெண்டர் விவகாரம் பேச  அறப்போர் இயக்கத்திற்கு வாய் பூட்டு  - சென்னை உயர்நீதிமன்றம்

நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  கூறியது.

அதிமுக ஆட்சிகாலத்தில் 2016 -21 ஆண்டுகளில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி ரூபாஉ இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தலைமைச்செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்சஒழிப்பு துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை - 22  புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தது. இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கம் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், விதிமுறைகளைப் பின்பற்றாமல் டெண்டர் வழங்கப்பட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டது அவதூறு இல்லை எனவும், அறப்போர் இயக்கத்தின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில், அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பதில் மனுவிற்குப் பதிலளிக்கக் கால அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அறப்போர் இயக்கத்தின் செயலால் மன உளைச்சலும் அவப்பெயரும்  ஏற்ப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு வாதம் வைத்தனர் . இதனை கேட்ட நீதிபதிகள்  நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

                             

                                                                                                                 - ரதி ராஜேந்திரன்