பிரதமர் பதவிக்கான போட்டியில் பிரபல முதலமைச்சர் முன்னணி...

2024 பிரதமர் பதவிக்கான போட்டியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா முன்னணியில் இருப்பதாக பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் பிரபல முதலமைச்சர் முன்னணி...

2024 பிரதமர் பதவிக்கான போட்டியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா முன்னணியில் இருப்பதாக பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த முன்னாள் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான பாபுல் சுப்ரியோ சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024 நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மம்தா பிரதமராக வேண்டும் என தான் ஆசைப்படுவதாகவும், பிரதமர் பதவிக்கான போட்டியில் மம்தா முன்னணியில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது எனவும் கூறினார்.

சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வ நாளேட்டில், மோடிக்கான மாற்று முகமாக ராகுல் தோல்வியடைந்துவிட்டதாகவும், மம்தாவே மோடிக்கான சிறந்த மாற்று முகம் எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது பிரதமர் பதவி மீது மம்தாவுக்கு இருக்கும் ஆசையை எதிர்கட்சிகளுக்கு சூசகமாக வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.