ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ...

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஊர் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ...

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீருக்குள் வர அஞ்ச வேண்டும் என்பதற்காக, ஜம்மு - காஷ்மீரில் தங்கியிருந்து பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் அச்சமடைந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் திரும்பி வருகின்றனர். ஜம்மு - காஷ்மீரின் சூழல் மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதனால் சொந்த ஊர்களுக்கே திரும்புவதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.