குழந்தை பெற தயங்கும் நவீன காலத்துப் பெண்கள்... கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு...

நவீனகாலத்து பெண்கள் குழந்தை பெற தயங்குவதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பெற தயங்கும் நவீன காலத்துப் பெண்கள்... கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு...

நாட்டில் தற்போது உள்ள நவீன பெண்கள் தனித்து வாழவே விரும்புவதாகவும், அப்படியே திருமணம் செய்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை எனவும், கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களுரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சுதாகர், நவீன காலத்துப் பெண்கள் வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக கூறியுள்ளார்.

நம் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இது நல்லதல்ல என்றும், மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் இந்திய மக்களிடம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுதாகரின் இந்த பேச்சு, பெண்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.