ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார் மோடி!

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறார்.

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார் மோடி!

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறார்.

ஐ.நா. பொது சபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லாவும் செல்கின்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கெனவே அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் நடத்தும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து ஜப்பான்பிரதமர் யோஷிகிடே சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை அவர் நாளை சந்தித்துப் பேசுகிறார்.

அன்றைய தினம் அமெரிக்க தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இதில்ஆப்பிள் நிறுவன தலைமை செயல்அதிகாரி டிக் குக்கும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுப்பார்.

இதேநாளில் அமெரிக்க அதிபர்ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்துப் பேசுகிறார்.