முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு 15வது கூட்டம்.. தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பங்கேற்பு!!

டெல்லியில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் 15வது கூட்டத்தில்  தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார்.

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு 15வது கூட்டம்.. தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பங்கேற்பு!!

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் 15வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.

மேற்பார்வை குழுவின் தலைவர் குல்சன் ராஜ் தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தில் தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, முல்லைப் பெரியாறு அணை தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர் சுப்பிரமணியன், பெரியாறு-வைகை நதிப் படுகை பொறியாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.  இதேபோல கேரள அரசின் நீர்வளத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.  

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க கேரள அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  தமிழக அரசு தரப்பில்  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.