மராட்டியத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!!

மராட்டியத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  9 பேர் மர்ம மரணம் அடைந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி  இருக்கிறது.

மராட்டியத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  9 பேர் மர்ம மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!!

மராட்டியத்தின் சங்கிலி மாவட்டத்தில் ஹைசால் என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேரும் இறந்து கிடந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். அவர்கள் தற்கொலை செய்திருக்க கூடும் என மற்றொரு காவல் அதிகாரி சந்தேகம் தெரிவித்து உள்ளார்.

எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சரியான காரணம் தெரியவரும். ஒரே வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்ம மரணம் அடைந்து கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.