பூஞ்ச் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற புதிய தீவிரவாத அமைப்பு - 8 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளதால் அதிர்ச்சி  

ஜம்மூ காஷ்மீரில் ராணுவ வீரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட பூஞ்ச் தாக்குதலுக்கு புதிய தீவிரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

பூஞ்ச் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற புதிய தீவிரவாத அமைப்பு - 8 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ளதால் அதிர்ச்சி   

ஜம்மூ காஷ்மீரில் ராணுவ வீரர்களை குறி வைத்து நடத்தப்பட்ட பூஞ்ச் தாக்குதலுக்கு புதிய தீவிரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​பகுதியில் கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நீடித்து வருகிறது. இதில் குண்டடிபட்டு இதுவரை 9 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்துள்ளனர். இந்தநிலையில் பூஞ்ச் பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக மக்கள் எதிர்ப்பு பாசிச முன்னணி என்ற புதிய தீவிரவாத அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சுமார் 8 நிமிடங்கள் வரை ஓடும் இந்த காணொளியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பூஞ்ச் பகுதியில் கடந்த 11 ஆம் தேதி ராணுவ வாகனங்கள் எவ்வாறு கண்காணிக்கப்பட்டது மற்றும் தாக்குதல் தொடங்கியதன் விவரங்களை விவரிப்பது போல் உள்ளது.

இதனை இந்திய ராணுவம் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. புதிய தீவிரவாத அமைப்பு உருவாகியிருப்பதாக வெளியான இந்த வீடியோ  எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.